கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

திருவப்பூர், கவிநாடு கிராம மக்கள் சார்பில் 56 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 200 காளைகள் மற்றும் 650 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடி வாசலில் இருந்து துள்ளிக்குதித்து வந்த காளைகளை காளையர்கள் அடக்கிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இதனை பார்க்க சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Exit mobile version