அரியலூரில் ஊர் பொது மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டுப் போட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ஊர் பொது மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. விருந்தினராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜே.கே.என்.ராமலிங்கம் கலந்து கொண்டார். பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வாடிவாசலிலிருந்து சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர். இந்த போட்டியில் தஞ்சை, திருச்சி, காரைக்குடி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 450 காளைகளும் , 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாடு மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Exit mobile version