ஆத்தூர் அருகே விமர்சையாக தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ஆத்தூர் அடுத்த கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலாவதாக கோயில் காளை அவிழ்க்கப்பட்டு, அதைத் தொடர்ந்து மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்றன. சீறிவரும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் தீரத்துடன் அடக்கியது பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்க சேலம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கூலமேட்டில் குவிந்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி கெங்கவல்லியிலும், 21-ம் தேதி நாகியம்ப்பட்டி மற்றும் 27-ம் தேதி தம்மம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது.

Exit mobile version