சேந்தமங்கலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.

சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தம் பகுதியில் பல ஆண்டுகளாக ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். போட்டியில் பொட்டிரெட்டிபட்டி, கொல்லிமலை, முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி,  துறையூர், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 450க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.  300க்கும் அதிகமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

Exit mobile version