வெகு விமரிசையாக நடைபெற்ற அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு போட்டி

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அலங்காநத்தம் பகுதியில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 350க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாடுபிடிவீரர்கள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

Exit mobile version