காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் திட்டம் ?

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த அதிரடி முடிவு பாகிஸ்தானை நிலைகுலையச் செய்துள்ளது. ஐநா சபையும் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்ட நிலையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு மூலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி, பக்ரீத் மற்றும் சுதந்திர தின விழாக்களின் போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப் படையை சேர்ந்த 7 பேர் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயற்சிப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, எல்லைப் பகுதியில் ராணுவத்தினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதாக ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version