காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்த திட்டம்

ஜம்மு காஷ்மீரின் முக்கிய இடங்களில் பாகிஸ்தான் படை உதவியுடன் தீவிரவாத அமைப்புகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது, லஸ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த பயிற்சி பெற்ற தீவிரவாத குழுக்கள் இந்திய ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஊடுருவி தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான முஷாபராபாத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீர், சோப்ரே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்கள் முகாம்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தெற்கு காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் வரும் நாட்களில் தாக்குதல் நடத்த ஏதுவாக IED வெடிகுண்டுகளை தயாரிக்க ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடன் சேர்ந்து தீவிரவாத குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் உளவுத்துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து காஷ்மீருக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று தங்கள் நாட்டு மக்களுக்கு பிரிட்டனும், ஜெர்மனியும் அறிவுறுத்தி உள்ளன.

Exit mobile version