மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் தொகுதியில் நிற்பதற்கு கூட தகுதியற்றவர் என அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், அரக்கோணத்தில் போட்டியிடும் பாமகவை சேர்ந்த ஏ.கே. மூர்த்தி, சிறப்பான வகையில் நாடாளுமன்ற பணியை மேற்கொண்டதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பாராட்டை பெற்றவர் என பாராட்டு தெரிவித்தார்.