பிரசாரத்தை கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளர்

மதிமுக பொது செயலாளர் வைகோ பிரசாரம் மேற்கொண்டபோது அதனை கவனிக்காமல் செல்போனை வைத்து அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளரின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக மதிமுக பொது செயலாளர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக வேட்பாளர் தனுஷ்கோடி பிரசாரத்தை கவனிக்காமல் செல்போனை வைத்துக் கொண்டு பேசியபடியும் செல்ஃபி எடுத்தபடியும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்துள்ளார்.

மேலும், ஒரு கையால் வணக்கம் வைத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டது நகைப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு அலட்சியமாக நடந்து கொண்ட திமுக வேட்பாளரின் நடவடிக்கை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Exit mobile version