ஆந்திர முதல்வராக நாளை ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு

நாளை ஆந்திர முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதி கோயிலில் வழிபாடு செய்தார்.

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 159 இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் புதிய முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளார். ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருடன் முக்கிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் திருப்பதி கோயில் சுவாமி தரிசனம் செய்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ஆலய நிர்வாகிகள் பிரசாதங்களை வழங்கினர்.

Exit mobile version