ஐநாவுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை

ஐ நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியில் பல்கலை கழக பேராசிரியர்கள், பணியாளர்களும் பங்கேற்றனர். ஐ நா மனித உரிமை பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைபடுத்த இலங்கை அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கக்கூடாது, போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி அவர்கள் அனைவரும் பேரணியாக சென்றனர். இந்த பேரணியானது யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது. இதில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என முழக்கமிட்டவாறு பேரணியாக சென்றனர்.

Exit mobile version