வரும் 28 ஆம் தேதிக்கு பிறகு போராட்டம் தீவிரப்படுத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

ஜனவரி 28 ஆம் தேதிக்கு பிறகு போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் 23 அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாஸ், நீதிமன்றம் தங்களது போராட்டத்திற்கு தடை விதிக்கவில்லை என்றார். மேலும் 28 தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்நிலையில், அதனைத் தொடர்ந்து போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

Exit mobile version