ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஸ்டிரைக் காரணமாக பல மாவட்டங்களில் பாதிப்பில்லை என தெரிய வந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, பல மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கின. விருதுநகர் மாவட்டத்தில் இப்போராட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் 16 ஆயிரத்து 363 ஊழியர்களில், 14 ஆயிரத்து 953 பேரும், 10 ஆயிரத்து 779 ஆசிரியர்களில், 6 ஆயிரத்து 446 ஆசிரியர்களும் பணிக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலையே இருக்கிறது.

Exit mobile version