சத்தியமங்கலத்தில் விமரிசையாக நடைபெற்ற ஐயப்பன் திருவீதி உலா

சத்தியமங்கலத்தில் ஐயப்பன் திருவீதி உலா, செண்டை மேளம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பவானி ஆற்றங்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் நெய், திருநீர், மஞ்சள் நீர் ஆகியவற்றைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் செண்டை மேளம், தீப்பந்தம் சுற்றுதல் மற்றும் சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளுடன், ஐயப்பன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்
கலந்துகொண்டு கையில் விளக்குகளை ஏந்தியவாறு ஐயப்பன் பல்லக்குடன் ஊர்வலமாக சென்றனர்.

Exit mobile version