ராகுல் காந்தி வறுமையை ஒழிக்க போவதாக கூறுவது வேடிக்கை: ஜி.கே வாசன்

வறுமைக்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்தப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கை என தமாகா தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியில் சட்டமன்ற வேட்பாளர் காந்தி மற்றும் மக்களவை வேட்பாளர் நடராஜன் ஆகியோருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தோற்க போவது உறுதி என்று அறிந்ததாலேயே மக்களை ஏமாற்றும் வகையில் வறுமையை போக்க போகிறோம் என பொய் கூறி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version