ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது!

ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து. இந்நிலையில் ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான வீராங்குப்பம், மேல் சான்றோர் குப்பம், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. அதே போல், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியான ஆலங்காயம் பகுதிகளில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Exit mobile version