நடிகர் விஜயின் ஊதிய விபரத்தை வெளியிட்ட வருமான வரித்துறை!

பிகில் படத்தையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் `மாஸ்டர்’. கடலூரில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போது, நடிகர் விஜயை வருமானவரித்துறையினர் தங்கள் காரிலே அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். வருமான வரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இரண்டு நாள்கள் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ஜனா கல்பாத்தி, பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோர் நேரில் ஆஜராக கோரி வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக, விஜய் சார்பில் அவரது ஆடிட்டர் நேரில் ஆஜரானார். இந்நிலையில், இன்று மீண்டும் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் கொண்டு மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் `விஜய் முறையாக வருமானவரி செலுத்தியுள்ளார் எனவும்,  பிகில் படத்துக்கு அவர் 50 கோடி மற்றும் மாஸ்டர் படத்துக்கு 80 கோடி ரூபாய் அவர் ஊதியமாக பெற்றுள்ளார்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version