ஐ.டி. நிறுவன பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை!

அரசு அறிவித்த வழிமுறைகள் படி, ஐ.டி. நிறுவனங்கள் தங்களது பணியை மேற்கொள்ளலாம், என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை உலகத்தமிழ் சங்கத்தில், ஐ.டி. நிறுவன பிரதிநிதிகளுடன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அமைச்சர், அரசு அறிவித்த வழிமுறைகள் படி, ஐ.டி.நிறுவனங்கள் தங்களது பணிகளை துவங்கலாம் என தெரிவித்தார். ஐ.டி. நிறுவனங்கள், குறைவான ஊழியர்களை மட்டுமே வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்றும், 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் போன்ற பல்வேறு வழிமுறைகளை அமைச்சர் தெரிவித்தார். அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் நகராட்சி ஆணையாளர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version