ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன், சுவாமி தரிசனம் செய்தார்.

எழுமலையானை வழிபட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன்-2 விண்கலம் வரும் திங்கட்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு பிறகு நிலவில் தென்திசையில் லேண்டர் மூலமாக இறங்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக விண்கலம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் சரியான திசையில் சந்திராயன்-2 இறங்கும் என்று சிவன் குறிப்பிட்டார். 

Exit mobile version