எதிர்காலத்தில் இணைந்து செயல்பட விருப்பம்: இஸ்ரோவிற்கு நாசா பாராட்டு

சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் தென்துருவ பகுதிக்குள் தரையிறக்க முயற்சித்த இஸ்ரோவின் சாதனைக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் நாசா விஞ்ஞானிகளுக்கு புதிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்திருப்பதாக நாசா ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் நமது கோள்களை ஆராய்ச்சி செய்யும் பணியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதேபோன்று பல்வேறு சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version