இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சுவாமி தரிசனம்

இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 1வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி44 ராக்கெட் இன்று இரவு 11.40 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.

அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன், இந்த ஆண்டு மொத்தம் 32 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version