இந்தியாவுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. டெல்லியில் பேசிய இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா, புல்வாமாவில் இந்திய சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் மீதான தாக்குதல் கண்டத்திற்குரியது என்றார். இந்தியா தங்களின் நட்பு நாடு என்று குறிப்பிட்ட ரோன் மல்கா, தங்களின் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.

Exit mobile version