இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரிப்பு…!

இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இஸ்ரேல் சகோதரர்களை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதி உள்பட பாலஸ்தீனிய ஆயுத குழுவை சேர்ந்த 6பேரை இஸ்ரேல் படையினர் சுட்டுக்கொன்றனர். இதில் 11பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவரை 60 பாலஸ்தீனியர்கள், 14 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version