பாலஸ்தீன ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதல்!

பாலஸ்தீன் நாடு ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நடைபெற்ற மோதலில், இஸ்ரேலியப் படையால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலையடுத்து இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே தொடர்ந்து மோதல் நிலவுவதால், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாலஸ்தீன பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

Exit mobile version