மொஹரம் தினத்தை முன்னிட்டு தீ மிதித்த இஸ்லாமியர்கள்

திருவண்ணாமலை அருகே மொஹரம் தினத்தை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தீ மிதித்தனர்.

செங்கத்தில் உள்ள ஆறு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் தலைமையில் 26-ஆண்டு மொஹரம் விழா நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி முதல் நாள் தோறும் சிறப்பு தொழுகையுடன் மொஹரம் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, மில்லத் நகர் பள்ளி வாசல் அருகே, உருது பாட்டு கச்சேரி இரவு முழுவதும் நடைபெற்றுது. இதனையடுத்து அதிகாலை தொழுகையுடன் பள்ளிவாசல் அருகில் இஸ்லாமியர்கள் தீ மிதித்தனர்.

Exit mobile version