இஷா அம்பானியின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கியது -5,100 சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 3 வேளை விருந்து

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகள் திருமணத்தை ஒட்டி 5 ஆயிரத்து 100 பேருக்கு அன்னாதானம் வழங்கினார்.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் வரும் 12-ம் தேதி ஆடம்பரமாக நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் உதய்ப்பூரில் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக நான்கு நாட்களுக்கு சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 100 பேருக்கு மூன்று வேளை விருந்து அளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

இதில் முகேஷ் அம்பானி அவர் மனைவி நீட்டா அம்பானி, அவரது மகளும் மணப்பெண்ணுமான இஷா அம்பானி, மாப்பிள்ளை ஆனந்த் பிராமல் அவரது குடும்பத்தினர் என அனைவரும் பங்கேற்றனர். மணப்பெண் இஷா அம்பானி குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

 

Exit mobile version