ராஜமவுலி படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா? – அதிர்ச்சியில் சினிமா உலகம்

பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளை துவங்கி விட்டார்.

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியாபட் என பல திரைபிரபலங்கள் நடிக்கும் இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஆனால் முதற்கட்டமாக “ஆர் ஆர் ஆர்” என்ற பெயருடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் “ஆர் ஆர் ஆர்” என்பதற்கு விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் படக்குழுவினருக்கு அனுப்பலாம் என கேட்டுக்கொண்டனர். அதன்படி ரசிகர்கள் பலர் மொழி பாகுபாடு பார்க்காமல் பல்வேறு டைட்டில்களை அனுப்பியுள்ளனர்.

 

அதில் சில டைட்டில்களை படக்குழு ஒரு போஸ்டராக வெளியிட்டுள்ளது. அதில் “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற வார்த்தை பெரிதாக காட்டப்பட்டுள்ளது. படமும் சுதந்திரத்திற்கு முந்தைய படம் என்பதால் இது போன்ற ஒரு டைட்டிலை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version