விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இன்று வெளியிடுகிறதா நாசா ?

விக்ரம் லேண்டர் புகைப்படத்தை நாசா இன்று வெளியிடுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக நாசாவின் LRO விண்கலத்தை செப்டம்பர் 17ஆம் தேதி, விக்ரம் லேண்டர் விழுந்த பகுதிக்கு அனுப்பி வைத்து, லேண்டரின் நிலை குறித்த புகைப்படத்தை எடுக்க உள்ளதாக நாசா அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை நாசா வெளியிடுமா ? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ள லேண்டர் குறித்த பல தகவல்களை நாசா சேகரித்துள்ளதாகவும், புகைப்படத்துடன் அதன் விவரங்களை நாசா வெளியிடக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version