தமிழக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல்

தமிழக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் கடிதம் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 9ம் தேதி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவன் காஜா மொய்தீனையும் மற்றும் அவரது கூட்டாளிகளையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த 17 பேரை தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் தமிழக கியூ பிரிவு காவல்துறையினருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் கைது நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மிரட்டல் கடிதம் குறித்து தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version