இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்ய சமூக ஆர்வலர் கோரிக்கை

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் மீது தேசத் துரோக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

‘சர்கார்’ படத்தில் அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயிட்டு கொளுத்துவதாகவும் அவற்றை இயக்குநர் முருகதாஸ் தன்னுடைய கையாலேயே தீயில் போடுவதாகவும் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசை இழிவுப்படுத்தும் வகையில், இத்தகைய காட்சிகளை ‘சர்கார்’ படத்தில் அமைத்துள்ள முருகதாஸ் மீது தேச துரோக சட்டம் 124ஏ பிரிவின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜன் தனது மனுவில் கோரியுள்ளார்.

Exit mobile version