ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பெற்ற ஈராக் பெண்…

ஈராக்கின் கிழக்கு மாகாண தியாலியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறந்துள்ளது. அதுவும் சுகப்பிரசவத்தில் அந்த குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 6 ஆண், 1 பெண் குழந்தையும் அடங்கும். மேலும் தாயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1997ஆம் ஆண்டு அமெரிக்காவின் கென்னி-பப்பே தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்தது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கென்னி-பப்பே தம்பதியின் 7 பிள்ளைகளும் தங்களது 21வது பிறந்த நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது..

Exit mobile version