ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே, ஈரான் இன்று ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில், உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ,ஈரான் 3 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளிவராத நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவப் படை குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.