ஈரானும் அமெரிக்காவும் அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் -போப் ஆண்டவர் பிரான்சிஸ்

ஈரானும் அமெரிக்காவும் போர் பதற்றத்தை தவிர்த்து விட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

ஈரானில்  உள்ள அமெரிக்க தூதரகத்தை சூறையாடியதால் ஆத்திரமடைந்த அமெரிக்கா , மேற்காசிய நாடான, ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஈரானின் புரட்சி பாதுகாப்பு படையின், குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமானி, உள்ளிட்ட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.  இதனையடுத்து, அமெரிக்கா – ஈரான் இடையே, போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இருநாடுகளும் போர் பதற்றத்தை தவிர்த்துவிட்டு, அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என போப் ஆண்டவர் பிரான்சிஸ் வலியுறுத்தி உள்ளார்.
 

Exit mobile version