ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன்மார்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரத்தின் கிழக்குப் பகுதி காவல்துறைத் துணைத்தலைவராக இருக்கும் பாலகிருஷ்ணன், ரயில்வே காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை மாநகர ரயில்வே காவல்துறையில் இருந்த பி.கே.செந்தில்குமாரி, மாநகர கிழக்கு காவல்துறைத் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராமநாதபுரத்தில் கடலோர காவல்துறைக் கண்காணிப்பாளராக இருந்த சாம்சன், நெல்லை மாநகர இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version