ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகிறது – சவுரவ் கங்குலி

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், ஐபிஎல் நிர்வாகிகளின் கவுன்சிலிங் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

கூட்டத்தில்  இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ம் தேதி தொடங்கும் என்றும், இறுதிப்போட்டி மே 24ம் தேதி மும்பையில் நடைபெறும் என தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று கூறிய அவர் தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரரை களமிறக்கும் முறையும் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version