ஐபிஎல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை… ரசிகர்கள் ஆர்வம்…

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் கலந்துகொண்ட 12வது ஐ.பி.எல். தொடரில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. முதல் தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத்தை வீழ்த்திய ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி இறுதி போட்டிகான இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னையுடன் இன்று மோத உள்ளது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் மும்பையுடன் மோத உள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி விசாகபட்டிணத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version