ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார் ? : நாளை டெல்லி-சென்னை அணிகள் பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய 12வது ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் மும்பை, சென்னை, டெல்லி, மற்றும் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

முதல் தகுதி சுற்றுப் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய மும்பை முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனையடுத்து நடந்த வெளியேற்றுதல் சுற்றில் ஹைதராபாத்தை வீழ்த்திய ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னையுடன் மோத உள்ளது.

நடப்பு சீசனில் 3 ஆம் இடம் பிடித்த டெல்லி அணி 6 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ளே ஆஃப் சுற்று நுழைந்ததையடுத்து முதல் முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள நடப்பு சாம்பியன் சென்னை அணி கோப்பையை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் மும்பையுடன் மோத உள்ள நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி விசாகபட்டிணத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

Exit mobile version