ஐ.பி.எல்2021 – பெங்களூரு, மும்பை அணிகள் இன்று மோதல்!

14-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், மும்பை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றன. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவிலேயே நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று முதல், மே 30ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய 6 நகரங்களில் நடத்தப்படுகிறது.

எந்த அணியும் தங்களது சொந்த மண்ணில் விளையாடாதபடி போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இதற்காக இரு அணிவீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனனர். நாளை மும்பையில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியை எதிர்கொள்கிறது. கொரோனா பரவல் காரணமாக, மைதானத்திற்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version