ஐபிஎல்: சென்னை, டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும், இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணியும் மோதுவதால் ரசிகர்களுக்கு இடையே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பண்ட்டின் அதிரடி ஆட்டம் சிறப்பாக இருந்தது. இம்முறையும் அவர் அதிரடி காட்டுவர் என எதிர்பார்க்கலாம். பண்ட்டை விரைவில் வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டம் தீட்டிருப்பதாக தெரிகிறது. டோனியின் கேப்டன் அனுபவம் நிச்சயம் சென்னை அணிக்கு பெரும் பலமாக இருக்கும்.

டெல்லி அணியில் 6 வீரர்கள் மட்டும் 30 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் சென்னை அணியில் 13 வீரர்கள் 30 வயதை கடந்தவர்களாக இருக்கின்றனர். வயதான வீரர்களை வைத்திருந்தாலும் சென்னை அணியை எளிதில் வீழ்த்த முடியாது. நிச்சயம் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

Exit mobile version