கொரோனாவால் கேள்விக்குறியாகியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூட வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் முதல் போட்டி, மும்பையில் வரும் 29ம் தேதி தொடங்கவிருந்த நிலையில், ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

எனினும் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை எனவும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version