ஒரே நாளில் 2 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : இந்தியாவில் புதிய உச்சம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, புதிய உச்சமாக ஒரு நாளில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 60 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஒட்டு மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் ஒரு லட்சத்து ஆயிரத்து ஆறு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 82 ஆயிரத்து 339 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Exit mobile version