கொல்கத்தாவில் இன்று ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் நடைபெறுகிறது

கொல்கத்தாவில் 2020ம் ஆண்டின் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்களுக்கான வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

13-வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அதற்கான வீரர்களை வாங்குவதற்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 8 அணிகள் கொண்ட தொடரில், ஏற்கனவே வீரர்களை தக்க வைத்து கொண்டுள்ள அணிகள், எஞ்சியுள்ள இடங்களுக்கு வீரர்களை வாங்க உள்ளன. அதன்படி, 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட, 332 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், வீரர்களை ஏலம் எடுப்பதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடியே 60 லட்சம் ரூபாயும், டில்லி அணி 27 கோடியே 85 லட்சம் ரூபாயும் வைத்துள்ளன. பஞ்சாப் அணி 42 கோடியே 70 லட்சம் ரூபாயும், கொல்கத்தா அணி 35 கோடியே 65 லட்சம் ரூபாயும் வைத்துள்ளன. மேலும், மும்பை அணி, 13 கோடியே 5 லட்சம் ரூபாயும், ராஜஸ்தான் அணி 28 கோடியே 90 லட்சம் ரூபாயும் வைத்துள்ளன. பெங்களூரு அணி 27 கோடியே 90 லட்சம் ரூபாயும், ஹைதராபாத் அணி 17 கோடி ரூபாயும் தங்கள் வசம் வைத்துள்ளன.

Exit mobile version