ப.சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 3-ம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப.சிதம்பரத்தின் காவலை அக்டோபர் 3-ம் தேதி வரை மேலும் நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 14 நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது, வரும் 30-ம் தேதி வரை சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

சிபிஐ தரப்பின் இந்த கோரிக்கைக்கு ப.சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது இதையடுத்து தீர்ப்பு அளித்த நீதிபதி அஜய் குமார் குஹார், அக்டோபர் 3-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதேசமயம், ப.சிதம்பரத்தின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடவும், நாடாளுமன்ற ஆவணங்களில் கையெழுத்திடவும் ப.சிதம்பரத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Exit mobile version