ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரனை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொட்ர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்த சிபிஐ, செப்டம்பர் 5-ம் தேதி மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதனையடுத்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இதன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. ஏற்கனவே ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version