ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: முன்னாள் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் கே.வி.பெருமாளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர், சிதம்பரத்தின் உதவியாளராக 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.

மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் இந்திராணி முகர்ஜியிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், தற்போது பெருமாளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படாலம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version