தங்கும் வசதியுடன் கூடிய மாயா சூழல் சுற்றுலா அறிமுகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இயற்கை அழகை ரசிக்கும் வகையில், தங்கும் வசதியுடன் மாயா சூழல் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பார்வையாளர்களை வனத்துக்குள் அழைத்துச்செல்லும் வண்ணபூரணி சூழல் சுற்றுலா செயல்பட்டு வந்தது. கோடைகால தீ விபத்து போன்ற இடர்பாடுகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், வண்ணப்பூரணி சூழல் சுற்றுலா தற்போது மாயா சூழல் சுற்றுலா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு விடுதிகளில் தங்கி புலிகள் காப்பகத்தினுள் சென்று வரும் வகையில், இன்ப சுற்றுலாவாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் அருண்லால் தெரிவித்தள்ளார். இந்த சுற்றுலாவிற்கு வருகை புரிய விரும்பும் பார்வையாளர்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version