வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க Voter செயலி அறிமுகம்

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள Voter செயலி மூலம், உங்கள் தகவல்களை எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் தெரிந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

துலுக்கப்படி பகுதியில், மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தலைமையில், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் பயிற்சி பட்டறை நடைபெற்றது. வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் முயற்சியாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள பயிற்சி பட்டறையில், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில், வாக்களர் விவரங்களை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ளவும், Voter help line இணைய வழி மூலம் படிவத்தில் பெயர் திருத்தம், முகவரி மாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆட்சியர் சிவஞானம், Voter செயலி வசதி அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை உள்ளதாகவும் இதைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version