வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் முதல் திருத்தம் மேற்கொள்ளலாம்: சத்யபிரதா சாகு

வாக்காளர் பட்டியலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாகு, இணையதளம் மூலம் திருத்தம் மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

Exit mobile version