விவசாயிகளுக்கு பயனளிக்கும் இ-அடங்கல் செயலி அறிமுகம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ- அடங்கல் செயலி விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ – அடங்கல் என்ற புதிய செயலியை வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளுக்கு உதவும் வகையில் இ அடங்கல் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் காலங்களில் காலதாமதம் இன்றி நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், இ- அடங்கல் செயலி விவசாயிகள் இடையே வரவேற்பு பெற்றுள்ளதாகவும் தரம் மிகுந்த உண்மையான தகவல்களை மட்டுமே இச்செயலி வழங்குவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version