அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து சர்க்கரை ஆலை, அரசு கல்லூரி வழியாக வெள்ளிச்சந்தைக்கும், ஜக்கசமுத்திரம் வழியாக ஓசூருக்கும் புதிய பேருந்துப் போக்குவரத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 45 அரசு கல்லூரிகளில் 81 பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்களும், இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் புதிய பாடப் பிரிவுகளில் சேர்ந்துக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

Exit mobile version